Skip to main content

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விருதுகள் வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

 இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்தமைக்காக ‘சேபால குணசேன விருதை கல்வியலாளர், முன்னாள் தூதுவர் சட்டத்தரணி ஜாவிட் யூஸுப்புக்கு வழங்கி வைக்கப்பட்டது.


எமது போரத்தின் முன்னாள் செயலாளர் ஊடகவியலாளர் றிப்தி அலி விஷேட நிலைமைகளில் செய்தித் தேடலுக்கான பேராசிரியர் கே. கைலாசபதி  -2020  விருதினை பெற்றுக் கொண்டார்.


எமது போரத்தின் உறுப்பினர் ஊடகவியலாளர் எம்.எச் பாத்திமா ஹுஸ்னா சிறந்த சுகாதாரப் பராமரிப்புக்கும் மருத்துவ அறிக்கைக்குமான 2019,2020 ஆண்டுகளுக்கான விருதுகளும், சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான -2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் என மூன்று விருதுகள் பெற்றுக் கொண்டுள்ளார்.


எமது போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் மானா. மக்கீனுக்கு சிறந்த பத்தி எழுத்தாளருக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.


விருதுகள், சான்றிதழ்கள் வென்ற  அனைவருக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.


Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது