Skip to main content

Posts

Showing posts from November, 2021

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை கண்டனத்துக்குரியதாகும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம் கிண்ணியாவில் கடந்த 2021.11.23 ஆம் திகதி இடம்பெற்ற படகு   விபத்து தொடர்பாக அறிக்கை இடுவதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறது. எமது மீடியா போரத்தின் அங்கத்தவர்களான சக்தி நியூஸ் பெஸ்ட் பிராந்திய ஊடகவியலாளர் எச். எம். ஹலால்தீன் , தினகரன் பிராந்திய ஊடகவியலாளர்களான ஏ. எல்.எம். ரபாய்தீன மற்றும்   அப்துல் சலாம் யாசீம் ஆகியோர் தம் கடமைகளை செய்து கொண்டிருக்கும்போது அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஊடகவியலாளரான அப்துல் சலாம் யாசீமின் கையடக்கத்தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில்   கிண்ணியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் தம் கடமையான படகு விபத்து மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்களை அறிக்கை விடுவதற்கு முற்பட்டபோதே தாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற முறையற்ற செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக விசாரித்து சம்பந

பிரபல வரலாற்று ஆய்வாளரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது

  -ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழந்த அனுதாபம்- வரலாற்று ஆய்வாளரும் பன்னூலாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.  அவரது மறைவு இத்துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 83 வருடங்கள் வாழ்ந்து ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பல சமூகப் பணிகளில் அயராது ஈடுபட்ட மர்ஹூம் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி முதலான அமைப்புகளில் முக்கிய பங்காற்றியவர். முஸ்லிம் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் நூற்றுக்கணக்கான வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி மகத்தான பணியாற்றியவர். குறிப்பாக யுத்த கால இழப்புகளை துல்லியமாக ஆவணப்படு த்தியிருந்தார். அக்காலத்தில் வட கிழக்கில் முஸ்லிம்களுக்குரிய காணி உறுதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கா