Skip to main content

Posts

Showing posts from August, 2021

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி. ஹுஸைன் பாரூக்கின் மறைவுக்கு - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபம்

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சித் துறைகளில் சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகப் பணி புரிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி. ஹுஸைன் பாரூக்கின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதாக அதன் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் வீடுத்துள்ள   அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மர்ஹூம் ஹுஸைன் பாரூக் ,  கொழும்பு புதுக்கடையில் பிறந்தவர். தினபதி பத்திரிகையினூடாக ஊடகத் துறையில் பிரவேசித்த இவர் , 1956 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பாடல் ஒன்றைப் பாடியதையடுத்து    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உள்வாங்கப்பட்டார்.   பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் தயாரிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். பின்பு ஐரீஎன் ,  வர்ணம்   தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்.   வானொலியில் மிகப் பிரபலமான கலை நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி ,  நேயர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு முத்திர

ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.எல். லாபிர் காலமானார்

  - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான சகோதரர் எம்.எல். லாபிர் அவர்கள் நேற்று ( 22.08.2021) தனது 72 ஆவது வயதில் காலமானார் , இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து மாவனல்லையில் குடியேறி வாழ்ந்து வந்தார் சகோதரர் லாபிர். யுத்தம் முடிவுற்ற பின்னர் மீண்டும் தனது சொந்த மண்ணுக்குத் திரும்பிய அவர் , பல்வேறு சமூகப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக , யாழ் மாவட்டத்தையும் தெற்கிலிருக்கின்ற முஸ்லிம் சிவில் அமைப்புகளையும் ஒன்றிணைக்கின்ற பணியில் கணிசமானளவு பங்காற்றினார். “ ஒளி” எனும் சஞ்சிகையின் மூலம் ஊடகத் துறையில் பிரவேசித்த இவர் , வீரகேசரி , தமிழ் மிரர் , மெட்ரோநியூஸ் , விடிவெள்ளி , நவமணி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக சிறப்பாக சேவையாற்றினார். அவரது ஊடகப் பணிகளை யாழ் அரசாங்க அதிபர் பணிமனை பாராட்டி கௌரவித்திருக்கிறுது. கலாபூஷணம் , தேசகீர்த்தி , தேசசக்தி , ஊடகச்சுடர் , நிழல்படத் தாரகை மு