ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளரும் புத்திஜீவியுமான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இன்று தனது 79ஆவது வயதில் மறைந்தார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவரது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாரிய இழப்பாகும். கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்த பன்முக ஆளுமை கொண்ட ஒரு பெரும் புத்திஜீவியை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்திருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுப்பதற்கு தலைமை தாங்கி இவர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக “Muslims of Sri Lanka- Avenues to Antiquity” எனும் நூல் வரலாற்று நூல் இலங்கை முஸ்லிம்களால் நன்றியோடு நினைவுகூரத்தக்க மாபெரும் சாதனையாகும். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியாருடன் இணைந்து இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கலாநிதி சுக்ரி இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, சமூகப் பண்பாட்டு பெறுமானங்கள் பற்றி ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், ஏ.எம்.ஏ. அஸீஸ், எம்.எம்.எம். மஹ்றூப் வரிசையில் பெரிய பங்கினைச் செ