மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்களாள எப் எம் பைரூஸ், ஏ ஆர் எம் ஜிப்ரி நினைவுப் பேருரை
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
ஏற்பாடு செய்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
முன்னாள் பொதுச் செயலாளருமான மர்{ஹம்
எப்.எம். பைறூஸ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மீடியா போரத்தின் முன்னாள்
பொருளாளருமான மர்{ஹம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோரின் நினைவுச்
சொற்பொழிவு இன்று வெள்ளிக்கிழமை (31.01.2020) மாலை கொழும்பு 10> தபால்
தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் மர்ஹ_ம் எப். எம். பைரூஸ் பற்றிய நினைவுரையை
டெய்லிமிரர் பத்திரிகையின் ஆலோசக ஆசிரியர் எம். எஸ். எம். ஐயூப்
மற்றும் மர்ஹ_ம் ஏ. ஆர். எம். ஜிப்ரி பற்றிய நினைவுரையை சர்வதேச
அறிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் ஆகியோரும் நினைவுப் பேருரைகளையும்> முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஷேட உரையையும் நிகழ்த்தினார்.
கவியாபிமானி கலைவாதி கலீல் காலஞ்சென்ற
இரு ஊடகவியலாளர்கள் பற்றி கவிதை பாடினார்.
அத்துடன் இரு ஊடகவியலாளர்கள் நினைவாக
ஊடக குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்களும்> வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இரு சிரேஷ்ட
ஊடகவியலாளர்களதும் குடும்பத்தினர் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள்> பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்> முன்னாள் எம். பி டாக்டர் ஏ. ஆர் ஹபீஸ்> கல்விமான்கள்> புத்திஜீவிகள்> ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மர்{ஹம் ஏ. ஆர். எம். ஜிப்ரி கடந்த 2020.01.19ஆம் திகதியும் மர்{ஹம் எப். எம். பைரூஸ் கடந்த 2019 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியும் காலமானார்கள்.