இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இம்மாத இறுதியில் நாடுதிரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு 2019.12.06 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு கொழும்பு – 03 வாலுகாராம வீதி இலக்கம் 38 ல் உள்ள ஈஸ்டர்ன் வொக் ரெஸ்டுரன்டில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான பங்களதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாஹ் துருக்கி தூதரக அதிகாரிகள் மற்றும் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ; இந்த இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர். இலங்கையின் முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் முஸ்லிம் ஊடகவியலலாளர்களின் துறைசார் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு துருக்கி தூதுவர் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் போது துருக்கி தூதுவரை போரத்தின் தலைவர் பொன்னாடை போரத்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமொன்றையும