Skip to main content

Posts

Showing posts from September, 2019

மட்டு. மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் செய்லமர்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின்  vikalpa.org  ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு (2019.09.29) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. "சமூக ஊடகங்களும் - ஒழுக்க நெறியும்" எனும் தொனிப்பொருளில் இந்த செய்லமர்வு இடம்பெற்றது. விகல்ப இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் சம்பத் சமரக்கோன், ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநெசனல் நிறுவனத்தின் தகவல் தொழில்நூட்ப முகாமையாளர் ஹரித்த தஹாநாயக்க ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு சமூக ஊடங்ககளை சிறந்த முறையில் பொறுப்புடன் எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் அதன் நன்மை, தீமைகள் ஆகிய விடயங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான் மற்றும் விகல்ப இணையத்தளத்தின் இணை ஆசிரியர் இஷாரா தனசேகர ஆகியோர் இந்நெறியை நெறிப்படுத்தினர். இந்த ஒரு நாள் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அச்சு, இலத்திரனியல், இணைய ஊடகவியலாளர் பலர் கலந்துகொண்டிருந்தமை கு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின்  vikalpa.org  ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு (2019.09.28) சனிக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது. "சமூக ஊடகங்களும் - ஒழுக்க நெறியும்" எனும் தொனிப்பொருளில் இந்த செய்லமர்வு இடம்பெற்றது. vikalpa.org   பிரதம ஆசிரியர் சம்பத் சமரக்கோன், ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநெசனல் நிறுவனத்தின் தகவல் தொழில்நூட்ப முகாமையாளர் ஹரித்த தஹாநாயக்க ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு சமூக ஊடங்ககளை சிறந்த முறையில் பொறுப்புடன் எவ்வாறு கையாள்வது பற்றியும்  அதன் நன்மை, தீமைகள் ஆகிய விடயங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா  போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், தேசிய அமைப்பாளர் எம்.எப்.றிபாஸ் மற்றும்  விகல்ப இணையத்தளத்தின் இணை ஆசிரியர் இஷாரா தனசேகர ஆகியோர் இந்நெறியை நெறிப்படுத்தினர். இந்த ஒரு நாள் செயலமர்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அச்சு, இலத்திரனியல், இணைய ஊடகவியலாளர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் மு. க. கனிமொழிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும் இடையிலான விஷேட சந்திப்பு

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற கலைஞர் கருணாநிதியின் புதல்வியும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கவிஞர் மு. க. கனிமொழிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும் இடையிலான விஷேட சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கலாஷணம் என். எம். அமீன் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் பொருளாளர் ஜெம்ஸித் அஸீஸ், உப தலைவர்களான திருமதி புர்கான் பீ இப்திகார், எஸ். ஏ. அஸ்கர் கான் தேசிய அமைப்பாளர் எம். ரிபாஸ் உப செயலாளர் மௌலவி முஸ்தபா உப பொருளாளர் ஜாவிட் முனவ்வர் உட்பட போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள்  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீனின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை இந்திய ஊடகவியலாளர்களுக்கிடையிலான உறவை ஏற்படுத்தவும் பயிற்சி வாய்ப்புக்க

மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கை இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் கருத்தாடலும் நிகழ்வு

“இலங்கை இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் கருத்தாடலும்” என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த நிகழ்வு 2019.09.13ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை கொழும்பு ரமடா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார போஷாக்கு, சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கனேசன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீன் தலைமையில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. ரி பஷீர் (பொன்னாணி), மு. நவாஸ்கனி (இராமநாதபுரம்), கேரள மாநில முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத் எம். எல். ஏ, தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முக்கியஸ்தர் திருமதி பாத்திமா முஸப்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மகளிர் பிரிவு அங்குரார்ப்பணம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மகளிர் பிரிவு அண்மையில் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.          முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான திருமதி புர்கான் பி இப்திகார் தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முக்கிய உறுப்பினரும் , தமிழ் நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினருமான திருமதி பாத்திமா முஸப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். கொழும்பு 10 மருதானையில் அமைந்துள்ள எல் எம்தியாஸ் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என். எம். அமீன் எல் எம்தியாஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ஏ. எல்.. எம். உவைஸ் ஹாஜி , ஜனாப் எம் முஸப்பர் போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம். எஸ். எம். ஸாஹிர் மற்றும் சிரேஷ்ட பெண் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.   போரத்தின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர்களான திருமதி புர்கான் பீ இப்திக

ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදී මෙරිල් පෙරේරා මහතාගේ අභාවය පිළිබඳ මුස්ලිම් ජනමාධ්‍ය සංසදයේ ශෝක පණිවුඩය.

ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදී මෙරිල් පෙරේරා මහතාගේ අභාවය පිළිබඳ සිය පවුලේ අයට ශ්‍රී ලංකා මුස්ලිම් ජනමාධ්‍ය සංසදය සිය සාතිශය ශෝකය පළකර සිටී . ප්‍රාදේශීය මාධ්‍යවේදියෙකු ලෙස සිය ජනමාධ්‍ය මෙහෙවර ඇරඹූ මෙරිල් මහතා පුවත්පත් කිපයකම සේවය කර දිනපතා දිවයින පුවත්පතේ ප්‍රධාන කතෘ දූරයද දරා ඇත . ඔහු ගත් කතුවරයෙකු මෙන්ම ගීත හා කවි රචකයෙකු වීමද විශේෂත්වයකි . ඒ මහතා රට තුළ තිබෙන ජාතික හා ආගමික විවිධත්වය අගය කළ කෙනෙකි . හෙතෙම යම් ප්‍රවෘත්තියක් තමන් සේවය කළ පුවත්පතේ පළවූ විට එයට ප්‍රතිචාර දැක්වීමට අනෙක් පාර්ශවයක් ඉල්ලා සිටි විටෙකදී ඒ සඳහා ඉඩ ලබා දීමට තරම් සාධාරණ වූ නිහතමානී මාධ්‍යවේදියෙකි . ඔහු දැයෙන් සමු ගත්තේ නවක ජනමාධ්‍යවේදීන්ට උගත හැකි පාඩම් පිළිබඳ සිය අත්දැකීම් සහිත පුර් . වාදර් . ශයන් ඉතිරි කර තබමිණි . පෘතුල අත්දැකීම් හා දැනුමක් සහිතව මාධ්‍ය කටයුතුවල නියැලුනු ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදී මෙරිල් පෙරේරා මහතාගේ වියෝව ජනමාධ්‍ය ක්ෂේත්‍රයට හා රටට ඉමහත් වූ පාඩුවකි . එන් . එම් . අමීන් සභාපති ශ්‍රී ලංකා මුස්ලිම් ජනමාධ්‍ය සංසදය 2019.09.05