ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஊடக அமைப்புக்களுடனான நல்லெண்ண சந்திப்பு
புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஊடக அமைப்புக்களுடனான நல்லெண்ண சந்திப்பு 19ஆம் திகதி திங்கட்கிழமைகொழும்பில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில் கொழும்பு 5, கிருல வீதியில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த ஒன்று கூடலில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் , இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க உட்பட பிரதான ஏழு ஊடக அமைப்புக்களின் தலைவர்கள் , செயலாளர்கள் , பொருளாளர்கள் , ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு , நல்லிணக்கம் , ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேலும் வ லி யுறுத்தும் வகையில் புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் நாட்டின் தற்போதைய நிலைமையில் சகல ஊடக அமைப்புக்களும் கடந்த காலங்களை போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கிய