Skip to main content

Posts

Showing posts from February, 2019

யாழ். ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நடராஜா குகராஜா (குகன்) மீது நடாத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவது சகலரதும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  'டான்' தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்  குகன் என்றழைக்கப்படும் நடராஜா குகராஜா பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 19 ஆம் திகதி நிகழ்வொன்றில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சமயமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியே தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். போர் நடைபெற்ற காலப்  பகுதியில் ஏராளமான ஊடகவியலாளர்கள் வடக்கில் கொல்

துருக்கி தூதரகம் - மீடியா போரம் இணைந்து மாணவர்களுக்கு பாதணி வவுச்சர் கையளிப்பு

இனங்களுக்கிடையில் சகவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா  போரம் இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயத்துடன் இணைந்து மாவனல்லை, ஹிங்குல மாணிக்காவ  சிங்கள கணிஷ்ட வித்தியாலயத்தில் கல்விபயிலும் சுமார் 150 மாணவ மாணவிகளுக்கு பாதணிகளை கடந்த 21.02.2019  அன்று கையளித்தது.  மேற்படி கல்லூரி அதிபர் சேனாநாயக்க பண்டா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் மாணவ மாணவிகளுக்கான பாதணிகளுக்கான வவுச்சர்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் பிரதேச ஆசிரிய ஆலோசகர் மென்டேரிகம சங்கரத்ன தேரர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், வலயக் கல்விப் பணிப்பாளர் நிரோஸா பெர்னாண்டோ மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  படங்கள் : அஷ்ரப் ஏ. ஸமத்

லைப் டோக்ஸ் நிகழ்ச்சியில் மீடியா போரத்தின் தலைவர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவூன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரும் நவமனி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் எம் எம் அமீன் கலந்து சிறப்பித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் லைப் டோக்ஸ் நிகழ்ச்சி நேற்று 2019.02.06ஆம் திகதி நடைபெற்றது. கொழும்பிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிகாஸ் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான தலைமை தாங்கினார். பல்வேறு துறைசார்ந்தவர்கள்இ புத்திஜீவிகள் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் என் எம் அமீன் அவர்கள் தனது அனுபவங்களை உணர்வூபூர்வமாக பகிர்ந்துகொண்டார். ஒம்செட் நிறுவனம் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்துடன் ஆறாவது அமர்வாக ஏற்பாடு செய்த இந்த லைப் டோக்ஸ் நிகழ்வில் இம்முறை பேச்சாளராக கலந்துகொண்ட போரத்தின் தலைவர் என். எம் அமீன்  அவர்களுக்கான ஞாபகச் சின்னத்தை அவரது புதல்வாரன பி பி சி செய்திச் சேவையின் இலங்கை ஊடகவியலாளர் அஸாம் அமீன் வழங்கி வைத்தமை அனைவரினதும் வரவேற்பையூம் பெற்றது.  இந்த நிகழ்வின் இறு

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய செய்திப் பணிப்பாளராக ஜூனைத் எம் ஹாரீஸ் நியமனம் - மீடியா போரம் வாழ்த்து

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய செய்திப் பணிப்பாளராக ஜூனைத் எம் ஹாரீஸ்  நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் தாராக்குடிவில்லு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர்இ கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் கலைமாணிப்பட்டம் பெற்றவராவார். சர்வதேச உறவூகள் தொடர்பான கற்கையில் முதுமாணிப் பட்டம் பெற்ற இவர். மூன்று மொழிகளிலும் நிபுணத்துவ அறிவூபெற்றவராவார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினரும் வளவாளருமான இவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் கலாபூஷணம் என். எம். அமீன் உட்பட போரத்தின் நிறைவேற்றுக் குழு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது. 

கலாபூஷணம் விருது பெற்ற போரத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்

2018ஆம் ஆண்டிற்கான அரச கலாபூஷணம் விருதை பெற்ற தனது மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துக்களையூம் பாராட்டுக்களையூம் தெரிவித்துக் கொள்கின்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் மருதமுனை பி. எம். எம். ஏ காதர்இ கண்டி உடுதெனியவை பிறப்பிடமாகவூம் கொழும்பை வசிப்பிடமாகவூம் கொண்ட சுதந்திர ஊடகவியலாளரும் சிரேஷ்ட சட்டதரணியூமான ரஷீட் எம் இம்தியாஸ மற்றும் மினுவங்கொடையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான மௌலவி ஐ. ஏ. காதிர் கான் ஆகியோரே கொழும்பு தாமரை தடாகத்தில் கடந்த 2019 ஜனவரி 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற அரச கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை பெற்றுக் கொண்டனர். மேற்படி விருதை பெற்ற போரத்தின் மூன்று சிரேஷட உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் கலாபூஷணம் என். எம். அமீன் உட்பட போரத்தின் நிறைவேற்றுக் குழு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.