Skip to main content

Posts

Showing posts from March, 2018

முஸ்லிம் மீடியா போரத்தின் 59வது ஊடக செயலமர்வு கல்-எளியவில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வின் 59வது செயலமர்வு நாளை  31ஆம் திகதி சனிக்கிழமை (31.03.2018) கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. “21ஆம் நூற்றாண்டில் ஊடகம்” எனும் தொனிப் பொருளில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன் தலைமையில் இந்தச் செயலமர்வு நடைபெறவுள்ளது. காலை 9 மணி தொடக்கம் மாலை வரை முழுநாளும் இரண்டு அமர்வுகளாக இடம்பெறும் இந்த செயலமர்வில் கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் க.பொ. த சாதாரண மற்றும் உயர் தரத்தில் கல்விகற்றும் சுமார் 300 மாணவர்களும் 50 ஆசிரியர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த அமர்வுகளில் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜுனைத் எம். ஹாரிஸ், நகர திட்டமிடல

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் திருமதி மும்தாஸ் ஸறூக் காலமானார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சிரேஷ்ட பெண் ஊடகவியலாளருமான திருமதி மும்தாஸ் ஸறூக் தனது 63வது வயதில் இன்று அதிகாலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இலக்கம் 438, லேக் சிட்டி, ஜா-எலயில் (ஜா.எல பேரூந்து நிலையத்திற்கு அருகில்) அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (28) மாலை 4.00 மணிக்கு (அஸர் தொழுகையைத் தொடர்ந்து) மாபோல ஜூம்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவூள்ளது. சிரேஷ்ட முஸ்லிம் பெண் ஊடகவியலாளரான திருமதி மும்தாஸ் ஸறூக்கின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த இரங்கலையூம் கவலையையூம் தெரிவிக்கிறது. இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. மன்னர்,  மூர் வீதியைப் பிறப்பிடமாகவூம் கொழும்பை வசிப்பிடமாகவூம் கொண்ட திருமதி மும்தாஸ் ஸறூக், ஆரம்ப காலத்தில் வீரகேசரி பத்திரிகையில் ஊடக தொடர்பாளராக இருந்து செயற்பட்டதுடன் மிக நீண்ட காலமாக அதாவது இறுதிவ

முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவம் இல்லை, பிரச்சினைகளுக்கு இதுவே காரணம் - சம்பிக்க

முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியிலும் சமய ரீதியிலும் கூட்டுத்தலைமைத்துவமும் சரியான வழிகாட்டல் இன்மையுமே அந்த சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயின் தலைவரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கிரிஸ்தவ சமூகத்தை பேராயர் கர்தினால் சரியாக வழிநடத்துவது போன்று முஸ்லிம் சமூகத்தையும் வழிநடத்த முஸ்லிம் சமய தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என் எம் அமீன் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று (17.03.2018) கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு 7 ல் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :- கிரிஸ்தவர்கள் மத்தியில் சமூக ரீதியிலோ அல்லது தேச

கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீடியா போரத்தின் பிரதிநிதிகள் விஜயம் - இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை

கண்டி மாவட்டத்தில் இனவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் சமகால நிலைவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் அடங்கிய குழுவினர் கடந்த 12ஆம் திகதி (12.03.2018) விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவூன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது கண்டி மாவட்டத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்ட திகன, பல்லேகல, கெங்கல்ல, மெனிக்ஹின்ன, அம்பதென்ன ஆகிய பகுதிகளை இக்குழுவினர் பார்வையிட்டனர். அத்துடன் திகன, கெங்கல்ல பிரதேசத்திற்குச் சென்று உயிரிழந்த மர்ஹூம் அப்துல் பாஸித்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதுடன் அப்பகுதியில் தாக்குதலுக்கிலக்கான பள்ளிவாசல், வீடுகள், வர்த்தக நிலையங்களையும் பார்வையிட்டனர். பின்னர் திகன பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் வகையில்

முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் முபாரக் அலி காலமானார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் சுதந்திர ஊடகவியலாளருமான அல்-ஹாஜ் எம்.கே. முபாரக் அலி இன்று (05.03.2018) காலமானார்.  அவரது ஜனாஸா இல. 71 தெமட்டகொட வீதி, கொழும்பு 09 வைக்கப்பட்டுள்ளது.  ஜனாஸா நல்லடக்கம் இன்று (05.03.2018) அஸர் தொழுகையின் பின்னர் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினராக தொடர்ச்சியாக 12 வருடங்கள் செயற்பட்டு வந்த இவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வரின் இணைப்பாளராக நீண்ட காலம் செயற்பட்டுள்ளார்.   இவரது மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.