Skip to main content

Posts

Showing posts from January, 2018

முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுக் கூட்டத்தில் ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் கௌரவிப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த 20ம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.  மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நிகழ்ந்த இந்த கூட்டத்தின் போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிதி மொஹமட் பாரூக் கௌரவிக்கப்பட்டார்.  இதன்போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் முஸ்லிம் சேவை தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஊடகவியலாளர் திம்ஸி பாஹிமின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பு! – முஸ்லிம் மீடிய போரம்

சிரேஷ்ட முஸ்லிம் பெண் ஊடகவியலாளரான ஹாஜியானி திம்ஸி பாஹிமின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவிக்கிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடிய போரத்தின் முன்னோடி அமைப்பான முஸ்லிம் மீடியா அலைன்ஸின் ஸ்தாபக தலைவரும் “த எகனொமிக் டைம்ஸ்” சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.ஸீ.ஏ. கபூர் அவர்களின் மூத்த புதல்வியான ஹாஜியானி திம்ஸி பாஹிம் தனது தந்தையின் மறைவையடுத்து கடந்த நான்கு தசாப்தங்களாக அதன் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர். ஊடகவியல் துறையில் முஸ்லிம் பெண்கள் அரிதாகவே பணியாற்றி வரும் நிலையில், கடந்த நான்கு தசாப்தங்களாக அவர் ஆற்றி வந்த ஊடகப் பணி மகத்தானது. மார்க்க விழுமியங்கள், ஒழுக்கங்களைப் பேணிய நிலையில் அவர் தொய்வின்றி இறுதி வரை தனது ஊடகப் பணியைத் தொடர்ந்தமை சாதனை என்றே சொல்ல வேண்டும். இவரது கணவன் அல்ஹாஜ் பாஹிம் கரீம் அவர்களும் ஓர் ஊடகவியலாளராக இருந்து அவரது பணிக்கு ஒத்துழைப்பு நல்கி வந்தார். இலங்கையின் பொருளாதார செய்திகளை சர்வதேசமயப்படுத்தியதில் ‘த எகனொமிக் டைம்ஸின்’ பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வெளிநாட்டுத் தூ