Skip to main content

Posts

Showing posts from August, 2017

உழ்ஹிய்யாவின்போது புத்திசாதுரியமாக நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம்

இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம். ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யாவை (குர்பானி) நிறைவேற்றுகின்றபோது நாட்டின் நிலைவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயம். உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்குகின்ற மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் பொதுவான வழிகாட்டல்களுக்கேற்ப முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வினயமாக வேண்டிக் கொள்கிறது. குறிப்பாக உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கமைய நிறைவேற்ற வேண்டும். உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை கொள்வனவு செய்யும்போதும் அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் உரிய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றிருத்தல், மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்துதல், வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவுக்கேற்ப பிராணிகளை வாகனத்தில் ஏற்றுதல், உழ்ஹிய்யாவுக்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை தீர்மானித்துக் கொள்ளுதல், குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொத

Iftar ceremony 2017 organized by SLMMF

Sri Lanka Muslim Media Forum 20th Anniversary (Full Video)

20 வருட பூர்த்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

கவிக்கோவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

பேராசிரியராக, அறிஞராக, இலக்கிய உலகின் பேரரசனாக, புதுக் கவிதை உலகின் பிதாமகனாக திகழந்த கவிக்கோ அப்துர் ரஹ்மானின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. இது தொடர்பில் முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; உருது கவிஞர்களின் பரம்பரையில் உதித்த கவிக்கோ உருது உள்ளிட்ட பல மொழி கவிதைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ், ஆங்கிலம், உருது, பாரசீகம், ஹிந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த அவர், காலத்தால் அழியாத அரிய பொக்கிஷங்களை விட்டுச் சென்றிருக்கிறார். சாகித்திய அகடமி உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான கவிக்கோவின் கவிதைகள் பல இலட்சக்கணக்கானோரை கவர்ந்தன. அறிவியல், ஆன்மிகம், வரலாறு, தத்துவம் என்று அவரது இலக்கியப் பணி விரிந்தது.  இஸ்லாமிய இலக்கிய கழகத்தை உருவாக்கி அதன் மூலம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளை இந்தியாவிலும் பிற நாடுகளில் நடத்தி சாதனை படைத்தவர். கவி அரங்குகளை அதிர வைத்தவர். இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

Sri Lanka Muslim Media Forum Annual Report 2014

துருக்கியின் முன்னாள் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட துருக்கியின் முன்னாள் பிரதமர் பேராசிரியர் அஹ்மத் தாவுதொக்லுவுக்கு உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்புக்குமிடையிலான சந்திப்பு 08.08.2017 அன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையிலான போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு துருக்கியில் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் துருக்கியின் முன்னாள் பிரதமர் பேராசிரியர் அஹ்மத் தாவுதொக்லுவுக்குவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களுக்கு வட்டியற்ற அருண கடன் திட்டம்

ஊடகவியலாளர்களின் தொழில்வான்மையை மேம்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படும் மாத்திய அருண என்ற கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக உயர்ந்த பட்சம் மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியின்றி கடன் வழங்கப்படவுள்ளது. இதேவேளை தம்மிடம் காணப்படும் ஊடக உபகரணங்களை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான கடனை 50 சதவீத வட்டியிலும் பெற்றுக்கொள்ளலாம். ஊடக நிறுவனங்களில் மூன்று வருட கால சேவைக்காலத்தை பூர்த்தி செய்த 60 வயதிற்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இதற்காக விண்ணப்பிக்கலாம்.  நிரந்தர, பகுதிநேர, சுதந்திர, பிராந்திய, இணையத்தள ஊடகவியலாளர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்கலாம்.  முகவரி: ஊடக பணிப்பாளர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு பொல்ஹேன்கொட, நாரஹென்பிட்டி. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினம் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியாகும்.